கலை இலக்கியப் பெருமன்றம்- கந்தர்வகோட்டை கிளை , புதிய பொறுப்பாளர்கள்

இன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - கந்தர்வகோட்டை கிளைக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார். கிளையில் நடந்த வேலைகள், எதிர்கால வேலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவிஞர்கள் படைப்புகள் வாசித்தார்கள். இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிளைத் தலைவர் - கவிஞர் மஞ்சை தாசன் செயலர் - தோழர் உ. ஜீவாதாசன் பொருளர் - கவிஞர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் துணைத் தலைவர் ஓவியர் அரங்க. கலியபெருமாள் துணைச் செயலர் கோ. சரவணமுத்து செயற்குழு உறுப்பினர்கள் சாமியய்யா ராஜேஷ் சத்தியராஜ் ராசு மோகன் கவியரசு மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி, உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டார். ஜெயப்பிரகாஷ் நன்றியுடன் கூட்டம் நிறைவுபெற்றது.